என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பல சரக்கு கடையில்"
- இன்று அதிகாலை பல சரக்கு கடையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
- விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55).
இவர் தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து அங்கு மிச்சர், முறுக்கு உள்பட பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் பல சரக்கு கடை ஒன்று நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக்கொண்டு பிரிட்ஜ் மட்டும் ஆன் செய்து வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இன்று அதிகாலை சுமார் 6 மணி அளவில் அந்த கடையில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.
இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து ஆறுமுகம் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல சரக்கு கடையில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கடையில் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்