என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பங்காரு அடிகளார்"
- பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அடிகளாரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்து இருக்கிறார். உயிரிழந்த பங்காரு அடிகளாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.
"மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin… pic.twitter.com/AQPJbfazYD
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 19, 2023
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய… pic.twitter.com/xQZ6txPVGs
— Udhay (@Udhaystalin) October 19, 2023
- மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளதாக தகவல்.
- ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கியவர்.
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார்.
ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.
பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர்.
மேல்மருவத்தூர் சித்தர் பீட கருவறையில் அபிஷேக ஆராதனை செய்ய பெண்களை அனுமதித்தவர் பங்காரு அடிகளார்.
அவர், ஆதிபராசக்தி மருத்துவ கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தார்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.
- வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது.
- பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மங்கள இசையு டன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அலங்கா ரத்துடன் தீபாராதனை செய்து வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர் பீட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினர். அது சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
காலை 9 மணி அளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதி பராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பால் அபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
ஆடிப்பூர தினமான இன்று சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கருவறை முன்பாக உள்ள சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.
நிகழ்ச்சிகளில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமா தேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில் குமார், டாக்டர் மதுமலர், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் வழிகாட்டு தலில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களை சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரஸ்வதி, சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.
- வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
- முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.
காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக மங்கள இசை வாசிக்கப்பட்டு பக்தர்களின் கர ஒலியுடன் புத்தாண்டை வரவேற்று ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கர்நாடக மாநில ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.
இந்த புத்தாண்டையொட்டி ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெங்களூர் ஜெய் தேவி மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மருத்துவ நிதியுதவி, சங்கரா புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம், 9 நபர்களுக்கு மடிக்கணினி, 18 நபர்களுக்கு தையல் இயந்திரம், 18 நபர்களுக்கு அறுவை சிகிச்சை எந்திரங்கள், 3 நபர்களுக்கு ஆட்டோக்கள், மருத்துவ மனைகளுக்கு நன்கொடைகள், சிறப்பு குழந்தைகளுக்கான அன்னை இல்லத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவிக்கான காசோலை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந் தில் குமார் தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்