search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "-கலெக்டர் அம்ரித்"

    • பொங்கல் தொகுப்பு வினியோகம் தொடங்கியது.
    • ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சி எம்.பாலாடா நியாய விலைக்கடையில் பொங்கல் பண்டிகை–யையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, கரும்பு, ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 335 ரேஷன் கடைகளில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 624 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 28 ரேஷன் கடைகளில் 18,400 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 26 ரேஷன் கடைகளில் 15,535 குடும்ப அட்டைதாரர்களுக்கும், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் 15 ரேஷன் கடைகளில் 2,235 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என நீலகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 404 ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வீதம் 2,19,794 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.21.97 கோடி வழங்கப்பட உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் வேலை நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகானந்தம், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்துசிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×