search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎன் நேரு"

    • கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர்.
    • 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் இருந்தது போல அல்லாமல் சட்டசபை தேர்தலில் சுமூகமான கூட்டணி அமையும் நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேச்சு தி.மு.க. கூட்டணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டத்தில் நான் பேசிய போது, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக ஆனதை, சட்டமன்றத்தில் பெருமையாக பேசினார்கள். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு கூறியதே தவிர கூட்டணியை யாரும் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர். வேண்டுமென்றே நான் பேசியதை மாற்றி போட்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
    • கம்பரசம்பேட்டை அருகே உள்ள பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அல்லூர் பாரதி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி மாவணர்களுடன் அமர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    முன்னதாக, கம்பரசம்பேட்டை அருகே உள்ள பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.
    • கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானாவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை நிறுவ அரசு முன்வருமா? என்று பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியாதவது:-

    திருவாரூர் தொகுதி வாளவாய்க்கால் ரவுண்டானா நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அதேபோல். பொது இடத்திலோ சாலைகளிலோ சாலை ஓரத்திலோ சிலை வைப்பதற்கு தடை உள்ள காரணத்தினால் தான் உடனடியாக அனுமதி வழங்கப்பட முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து சிலையை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் என்றார்.

    • காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (மே 26) காலை நடைபெற்றது. 

    இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும் கலந்து கொண்டார்.

    விழாவின்போது அமைச்சர் கே.என். நேரு அவர்கள் விழாவில் பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குருவுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, 'நாம் மரத்தை வளத்தால்; மரம் நம்மை வளர்க்கும்' என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார். 

    அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகள் பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும்.

    தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார். 

    முன்னதாக, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2024-25) தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடும் பணியை தற்போது தொடங்கி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு 4.5 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு திருச்சியில் 2,92,773 மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்" என்றார்.

    2002-ம் ஆண்டு முதல் ஈஷா சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள்.
    • பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

    திருச்சி:

    திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.

    மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள் அவ்வாறு எல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.

    தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான்.

    பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • அமைச்சர் மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. அதற்காக 100 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி, உணவருந்தும் இடம், கட்சி நிர்வாகிகள் அமருமிடம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்குமிடம், மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பம், கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.


    தினமும் காலை மாலை இரு வேலையும் அமைச்சர் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென அமைச்சர் புல்லட் வண்டியைதானே ஓட்டி சென்று பணிகளை சுற்றி பார்வையிட்டார் அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது.
    • 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அமருவதற்கான பந்தல், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே .என். நேரு ஆய்வு செய்து பந்தல் அமைப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தற்போது மாநாட்டு முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவதற்கான பாதை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமருமிடம் , உணவருந்துமிடம், கட்சி தொண்டர்கள் உணவு அருந்தும் இடம் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் உருவ சிலைகள் அமைக்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மாநாட்டிற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமும் தயாராகி வருகிறது. பந்தல் உள் பகுதியில் திரைச் சேலைகளால் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும் மாநாட்டை சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் நேருவுடன் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் .ஆர் . சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி .எம். செல்வகணபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.
    • தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

    இருப்பினும், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.

    இந்நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்," சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

    சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

    • பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சென்னையில் மெட்ரோ ரெயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோட்டிக் பிரசார வாகனத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

    தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிய நிலையில் சென்னையில் 30-ந் தேதிக்குள் வெள்ள தடுப்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டப்பட்டு இருந்தது . ஆனால் கடந்த 50 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றார் போல் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதே போன்று பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நின்றால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது கணுக்கால் அளவு தண்ணீர் நின்றால் கூட தண்ணீர் நிற்கிறது என்கிறார்கள். அதுவும் அடுத்த அரைமணி நேரத்தில் வடிந்து விடுகிறது.

    சென்னையில் மெட்ரோ ரெயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலம் முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சி பொறுத்த அளவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு செய்யும் பணி இன்னும் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. கடந்த 7 வருடமாக எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 2 வருடத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

    குடமுருட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாறு கரையை பலப்படுத்துவதற்கு ரூ. 330 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் நீர்வளத்துறை சார்பில் அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால் எங்கேயும் கரைகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

      கோவை:

      நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

      அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.

      நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்து ள்ளார்கள்.

      பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.

      ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார்.
      • ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது.

      தஞ்சாவூர்:

      தஞ்சை மாநகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம், பல்நோக்கு கட்டிட அரங்கம் உள்பட பல்வேறு பணிகள் ரூ .140 கோடி மதிப்பில் கட்டி முடிவடைந்துள்ளன.

      இந்தத் திட்ட பணிகளை வருகிற 27-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தநிலையில் இன்று விழா நடைபெறும் இடத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

      வரும் 26-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார். அன்று நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் பிஎல்ஏ 2 பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

      அதற்கு மறுநாள் 27ஆம் தேதி நவீன கருவிகளை கொண்டு விவசாயம் செய்வற்கான விவசாய கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மதியம் தஞ்சாவூருக்கு வருகிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலைய வளாகம், பல்நோக்கு மையக் கட்டிட அரங்கம், பழைய திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என பெயர் சூட்டுதல் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்த பல்வேறு திட்ட பணிகளை மாலை 5 மணி அளவில் திறந்து வைக்கிறார். மொத்தம் ரூ.140 கோடி மதிப்பில் முடிவடைந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

      தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்றைய தினம் அணைக்கு 4500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய தண்ணீரை பெற முதலமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.

      மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது. 24 மாதத்திற்குள் பணிகள் முடிவடைய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
      • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

      சென்னை:

      மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

      விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ×