என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர்வு"
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 53.81 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் 54.17 அடியாக உயர்ந்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவடட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 53.81 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் 54.17 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு 730 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2586 மி.கனஅடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. அணைக்கு 165 கனஅடிநீர் வருகிறது. 1055 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4212 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.95 அடியாக உள்ளது. அணைக்கு 34 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 320.15 மி.கனஅடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.04 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 16.88 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 52.23 அடியாக உள்ளது.
- 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 52.23 அடியாக உள்ளது. அணைக்கு 1593 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2297 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக குறைந்து ள்ளது.
இன்று காலை 1733 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 137 கன அடி நீர் வருகிறது. இருப்பு 5691 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.95 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 375.04 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 114.80 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 81.48 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்