என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குதிரை தாக்கி"
- ஆப்பக்கூடல் சாலை, அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றது.
- பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் பஸ் நிலையம், தேர் வீதி, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் சாலை, அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றது.
அச்சம்
இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டி களும் சாலையில் நடந்து செல்பவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்க ளும் ஒருவித அச்சத்தோடு சென்று வருகிறார்கள.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி அந்தியூர் வார ச்சந்தை, தேர் நிலையம் பகுதிக்கு பொது மக்கள் அதிக அளவில் வந்திரு ந்தார்கள். மேலும் அந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டும் இருந்தன. இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பெண் குழந்தை காயம்
இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் பகுதிக்கு திடீரென குதிரைகள் வந்தது. அந்த குதிரைகள் பொதுமக்களின் கூட்டத்தை பார்த்து மிரண்டு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதி கீழே தள்ளி சென்றது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி அடித்து கொண்டு சென்றனர். இதையடுத்து ஒரு பெண் மற்றும் குழந்தை கீழே விழுந்தனர். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
தொடர்ந்து அந்த குதிரை அரசு ஆஸ்பத்திரி கார்னர் பகுதிக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றவரை கீழே தள்ளியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அபராதம்
இதையொட்டி அந்தியூர் பகுதி மக்கள் ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி செயல் அலு வலர் செல்வகுமாரிடம் கேட்ட போது, குதிரையின் உரிமையாளர்கள் குதிரை களை பிடித்து சாலையில் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீறி சாலையில் சுற்றும் குதிரைகளை பிடித்து வேறு இடங்களுக்கு கொண்டு விடப்படும். மேலும் குதிரையின் உரிமையாள ர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்