என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல்வர் பதக்கம்"
- கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
- 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். மேலும் சமாதான வெண் புறாக்க ளையும், மூவர்ன நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டார்,
மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காவல்து றையினர் ஆயுதப்படை ஆய்வாளர் இளையராஜா தலைமையிலும், முதல் படைக்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் முத்துசாமி, இரண்டாம் படைக்கு உதவி ஆய்வாளர் கீர்த்தனா, தீயணைப்புத்துறை யினர் நிலைய தலைமை அலுவலர் ராமச்சந்திரன், வனத்துறையினர் வனவன் முருகன், ஊர் காவல் படையினர் ஜான ரத்தினம், தேசிய மாணவர் படையினர் ரஞ்சித், ஜூனியர் பிரிவு கவிராஜ் ஆகியோர் தலைமையிலும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 34 பேர், தீயணைப்பு மீட்புபணிகள் துறை 12- பேர், வருவாய்த்துறை 8 பேர், ஊரக வளர்ச்சி துறை 9 பேர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை 8 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 191 பேருக்கு நற்சான்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணி ஆற்றிய காவல்து றையினர் 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாசற்ற பணி நிறைவு செய்த ஈப்பு ஓட்டுநர்கள் 7 பேருக்கு 4 கிராம் தங்க பதக்கத்தை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, மருத்தவக்கல்லூரி மருத்து வமனை கண்காணிப்பாளர் நேரு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனா ளிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்