என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி வகுப்பறை"
- புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
- ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.
வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.
இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.
இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.
- புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
- ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.
வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.
இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.
இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.
- மேல்நிலை குடிநீர் தொட்டியை , தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
- அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் முன்னிலையில், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பாலகம், டி. ஆர்.நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியையும், வெள்ளகோவில் நகராட்சி, காடையூரான்வலசில் 15வது நிதி குழு மானியம் 2020-2021 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியையும், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். முன்னதாக அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இதில் நகர மன்ற தலைவர் மு .கனியரசி , ஆணையாளர் ஆர்.மோகன் குமார்,திமுக. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்