என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாய்க்காலில பிணமாக மீட்பு Rescue a corpse"
- தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு
- கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அர்த்தனாரி–பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளி. இவரது தந்தை மணி. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
இவரது தாய் சுசீலா (70). கடந்த 8 வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
சுசீலா, கடந்த ஒரு மாத காலமாக சென்னிமலை, 1010 காலனியில் உள்ள தனது மகள் கவிதா வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி சுசீலா, மகள் கவிதா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, கடந்த 27-ந் தேதி சென்னிமலை போலீசில் கவிதா புகார் செய்தார். மேலும் கவிதா–வின் சகோதரர் சுரேஷ் மற்றும் உறவினர்களும் சுசீலாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அறச்சலூர் அருகே, சிவகிரி செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு பெண் உடல் கிடப்பதாக சுரேஷுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சுரேஷ் இறந்து கிடக்கும் பெண் தனது தாய் சுசீலா தான் என்பதை உறுதி செய்தார்.
மேலும் நோயால் பாதிக்கப்பட்ட சுசீலா நோய்க் கொடுமையா–லும், வயது மூப்பு காரணமாகவும் வாய்க்கா–லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து, அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்