என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீன் பெட்டி"
- வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்
- தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனை
கன்னியாகுமரி:
தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பரைகோடு வழியாக ஒரு சொகுசு வேன் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வேனை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் வேக மாக சென்றது. உடனே அதிகாரிகள் பின் தொடர்ந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று சுவாமி யார்மடம் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே வேன் டிரைவர் சம்பவ இடத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.
பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அதில் மீன் வைக்கும் பெட்டிகளை அடுக்கி அதன் அடிப்பகுதியில் நூதன முறையில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி கடத்துவதற்கு ஏதுவாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்த வேனை தக்கலை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்