search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகர்"

    • முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர்.

    முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும்.

    மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

    வடலூரில் தைப்பூசம்

    கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..

    காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

    • முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார்.
    • தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

    முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.

    முருகன் என்றால் அழகு என்று பொருள்.

    முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார்.

    தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.

    இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார்.

    இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

    • முருகன் என்ற சொல்லுக்கு பொருள் அழகு என்பதாகும்.
    • முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.

    முருகன் என்ற சொல்லுக்கு பொருள் அழகு என்பதாகும்.

    நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை பார்க்க செக்கச்செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலவண்ணம் கொண்டிருக்கும்.

    இந்த அழகுக்காட்சியைக் கண்டமக்கள், முருகு என்று சொல்லி மகிழ்ந்தனர்.

    முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில் நீலநிறத்துடன் இருக்கும்.

    முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.

    காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளையெல்லாம் முருகனாகவே போற்றி வழிபட்டனர்.

    அதைத்தான் அழகெல்லாம் முருகனே என்று குறிப்பிடுகிறோம்.

    • தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.
    • முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும்.

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான்.

    முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.

    முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

    முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

    இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

    மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடி இருக்கின்றார்.

    அதன்மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார்.

    புராணங்களில் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப்பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நுல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த தாகவும், மதுரை தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    அதுபோல முருகனால் வாழ்வுபெற்று, முருகனின் வேலால் நாவில் தமிழ் எழுதப்பட்டு, முருகனின் அருளால் பாடல் பாடும் திறமை பெற்ற அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

    அந்த வகையில் அருணகிரியாரால் நான்கு திருப்புகழ்கள் பாடப்பட சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கேட்ட வரம் அருளும் வல்லமை உடையவராக கருதப்படுகிறார்.

    இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார்.

    பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொண்டு அடைந்த உருவமாகும்.

    ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார்.

    வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும், முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடதுகரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.

    சூரனை அழித்து வெற்றிபெற்ற முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ய, செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பால சுப்பிரமணியராய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.

    இத்தலத்து சுப்பிரமணியரை வழிபட நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    • அந்த இரு மலைகளையும் பூர்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர்.
    • இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான்.

    முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில் ஆசிரியனாகத் திகழ்ந்தவர் இடும்பாசுரன்.

    முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

    அகத்தியர் தனது பூஜைக்காக சிவசக்தி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் சக்தி மலை ஆகியவற்றை முருகப்பெருமானிடம் கேட்டார்.

    முருகப் பெருமானும் அவற்றை கொடுத்தார்.

    அந்த இரு மலைகளையும் பூர்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர்.

    எதிர் பாராத விதமாக அவர் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது.

    இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த அகத்தியரைக் கண்டான்.

    முருகப் பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான்.

    இடும்பன் அசுரனாக இருந்த போதிலும் அவனது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர்,

    பூர்சவனத்தில் உள்ள சிவமலை, சக்திமலையை பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்கும் என்றார்.

    இடும்பனும் அவனது மனைவி இடும்பியும் அங்கு சென்று அம்மலையை தூக்க சிவனை வேண்டி தவமிருந்தனர்.

    அப்போது நீண்ட கம்பு ஒன்று தோன்றியது.

    சிவன் அருளால் நாலா பக்கங்களில் இருந்து நாக பாம்புகளும் அங்கே வந்தன.

    அந்த பாம்புகளை கம்பில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்த படி

    பொதிகை வரும் வழியில் திரு ஆவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான்.

    இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கினான்.

    அவனால் முடியவில்லை.

    சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்று விளையாடிக் கொண்டிருந்தான்.

    அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான்.

    மலையில் இருந்து இறங்கி விடும்படி சொன்னான்.

    அந்த சிறுவன் இறங்க மறுத்ததுடன் "இது நான் தங்கப் போகும் மலை" என்ற வாதிட்டான்.

    இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்தச்சிறுவன் தன் கையில் இருந்த தண்டத்தால் இடும்பனை லேசாகத்தட்ட, அந்த அடியைத் தாங்க முடியாமல் இடும்பன் கீழே விழுந்து இறந்தான்.

    இதைகண்டு அவன் மனைவி இடும்பி கதறினாள்.

    அசுரர்களுக்கே வில்வித்தை கற்றுக்கொடுத்த தன் கணவனைக் கொல்லு ம் தகுதி, அசுரர்களை வென்ற அந்த

    முருகனைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என உறுதியாக நம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள்.

    அச்சிறுவன் மயில் மேல் முருகனாக காட்சி தந்து இடும்பனை எழுப்பி அருள் புரிந்தான்.

    "இடும்பா இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும்.

    நீ இந்த இரு மலைகளையும் தோ ளில் சுமந்து வந்தது போல எனக்குரிய வழிபாட்டு பொருட்களை பக்தர்கள் காவடியாக கொண்டு வர வேண்டும்.

    உன்னை முதலில் வழிபட்டே என்னை வழிபட வேண்டும்.

    உன்னை வணங்கியவர் என்னை வணங்கிய பயன் பெறுவார்கள் என்றார்.

    இதனால் இடும்பனை தரிசித்தால் இன்னல்கள் பறந்தோடி விடும்.

    கடந்த 2000ம் ஆண்டு பழனிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டது.

    13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது.

    540 படிகள் ஏறி இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும்.

    அப்படியானால்தான் முருகனை வழிபட்ட முழு பலனும் கிடைக்கும்.

    பழனி பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டல் தொலைவில் இடும்பன் மலை உள்ளது.

    காலை 7 மணி முதல் மாலை6 மணி வரை இடும்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து இருக்கும்.

    • இடும்பாயுதனே இடும்பா போற்றி என்ற வரியை கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது நீங்கள் படித்திருக்கலாம்.
    • இடும்பனை வணங்கினால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    இடும்பாயுதனே இடும்பா போற்றி என்ற வரியை கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது நீங்கள் படித்திருக்கலாம்.

    இந்த இடும்பன் தான் பழனி படைவீடு தோன்ற காரணமாக இருந்தான்.

    எனவே தான் என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும்.

    உன்னை வணங்குவோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும் என்று முருகனே கூறி உள்ளார்.

    ஆனால் பழனி செல்பவர்களில் பலர் இடும்பனை கண்டு கொள்வதில்லை.

    இடும்பனை வணங்கினால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

    இது தான் பழனி படைவீட்டின் தலவரலாறாகவும் உள்ளது.

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க

    அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவண பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க,

    ஆறு உருவங்களும் ஒரு உருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானை பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி "உங்களுக்கு மங்களம் உணடாகுக.

    உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தை சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டவதாகு"

    என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும்,

    அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    • மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
    • இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவது.

    மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வற்றில் தீபத் திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும்.

    இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர்.

    நாரத மகரிஷி 12 ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவி பெற்றார்.

    இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நூல்களான கந்தசஷ்டி கவசம்,

    சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது.

    • இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
    • இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

    கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி

    ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்வின் பதினாறு செல்வங்கள் கிடைக்கும்.

    தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.

    ப்ரமோதினி ஏகாதசி

    கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது.

    இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும்.

    பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

    இந்த போற்றியை சொல்லி முருகனை வழிபட துன்பங்கள் யாவும் விலகும்.

    ஓம் அழகா போற்றி

    ஓம் அறிவே போற்றி

    ஓம் அரன் மகனே போற்றி

    ஓம் அயன்மால் மருகா போற்றி

    ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

    ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

    ஓம் பன்னிருகை வேலவா போற்றி

    ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

    ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

    ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

    ஓம் இடர் களைவோனே போற்றி

    ஓம் உமையவள் மகனே போற்றி

    ஓம் உலக நாயகனே போற்றி

    ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

    ஓம் ஓம்கார சொருபனே போற்றி

    ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

    ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

    ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

    ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

    ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

    ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

    ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

    ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

    ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

    ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

    ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

    ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

    ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

    ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

    ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

    ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

    ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

    ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

    ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

    ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

    ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

    ஓம் கருணாகரனே போற்றி

    ஓம் கதிர் வேலவனே போற்றி

    ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

    ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

    ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

    ஓம் அறுபடை விடுடையவா போற்றி

    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

    ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

    ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

    ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

    ஓம் மகா சேனனே போற்றி

    ஓம் மயில் வாகனனே போற்றி

    ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

    ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

    ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

    ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

    ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

    ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

    ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

    ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

    ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

    ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

    ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

    ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

    ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

    ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

    ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

    ஓம் சரவணபவ சண்முகா போற்றி

    ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

    ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

    ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

    ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

    ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

    ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

    ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

    ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

    ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

    ஓம் யோக சித்தியே அழகே போற்றி

    ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

    ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

    ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

    ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

    ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

    ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

    ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

    ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

    ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி

    ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

    ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி

    ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

    ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

    ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

    ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

    ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி

    ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி

    ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

    ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

    ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

    ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி

    ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

    ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

    ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

    ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

    ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

    ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி

    ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி

    ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

    ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி

    • யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
    • மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

    1. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்" என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

    2. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

    3. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

    4. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள்

    தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.

    இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

    5. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

    6. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

    7. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

    பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

    8. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம்,

    குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

    9. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

    10. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

    11. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

    12. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

    13. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

    14. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.

    விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

    15. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.

    இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    16. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

    17. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன்,

    பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

    18. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே

    துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோவிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

    19. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா,

    மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

    20. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

    • கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
    • வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

    1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர்,

    6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர்,

    13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

    2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

    3. முருகனைப் பூஜிப்பதில் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி.

    இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது.

    (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

    4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

    1. சூரபத்மனை வதம் செய் தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,

    3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

    5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது.

    சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

    6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்.

    இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம்,

    அங்குசம், அம்பு, வேல்என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில்

    வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

    8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது.

    அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார்.

    வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

    9. முருகன் இறைபணி செல்வர்கள்: 1. அகத்தியர், 2. அருணகிரி நாதர், 3. ஒளவையார், 4. பாம்பன் சுவாமிகள்,

    5. அப்பர் அடிகளார்,6. நக்கீரர், 7. முசுகுந்தர், 8. சிகண்டி முனிவர், 9. குணசீலர், 10. முருகம்மையார்,

    11. திருமுருக கிருபானந்த வாரியார், 12. வள்ளிமலைச் சுவாமிகள், 13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.

    10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது.

    இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

    11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும்

    முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

    12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

    13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

    14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான்.

    சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.

    கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்" என்றும்

    சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

    15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

    16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி,

    கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி,

    பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன்,

    குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

    17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்" நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

    18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்" என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

    19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

    20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

    ×