search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. பிரமுகர் தற்கொலை"

    • கடந்த 3 மாதங்களாக பார் ஏலத் தொகையை கட்ட வில்லை. இதனால் கலால்துறை அதிகாரிகள் பாருக்கு சீல் வைத்தனர்.
    • கடன் பிரச்சினையால் மனமுடைந்த தி.மு.க பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கடமலைக்குண்டு அருகே தெய்வேந்திர புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் தி.மு.க. கிளைச் செய லாளராக இருந்தார். குமணன் தொழு பகுதியில் டாஸ்மாக் மது பார் நடத்தி வந்தார். கடந்த 3 மாத ங்களாக பார் ஏலத் தொகையை கட்ட வில்லை. இதனால் கலால்துறை அதிகாரிகள் பாருக்கு சீல் வைத்தனர்.

    மேலும் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கடன் பிரச்சினை தொடர்பாக மனைவி கவிதாவுடன் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த முருகன் வீட்டின் பின்புறம் இருந்த புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் முருகனின் உடலை பிரேத பரிசோத னைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×