என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 பேர் சிக்கினர்"
- குடிநீர் தொட்டியின் மேற்பகுதிக்கு செல்லும் தடுப்பு பாதை வழி பூட்டை உடைத்து தொட்டியின் மேற்பகுதியில் ஏறினர்.
- சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒகேனக்கல் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் சிவாடி காலனி, கந்துக்கால்பட்டி, ராமாயன சின்னஅள்ளி, சிவாடி உள்ளிட்ட 5 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா போதையில் குடிநீர் தொட்டி உள்ள பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் குடிநீர் தொட்டியின் மேற்பகுதிக்கு செல்லும் தடுப்பு பாதை வழி பூட்டை உடைத்து தொட்டியின் மேற்பகுதியில் ஏறினர்.
பின்னர் அவர்கள் போதையில் குடிநீரை மாசுப்படுத்தும் வகையில் தொட்டியின் மூடியை திறந்தும், வாந்தி எடுத்தும், சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதனை பார்த்து சத்தம் போட்டனர்.
இதையடுத்து மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்து நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர்.
இதையடுத்து குடிநீர் தொட்டி தண்ணீரை அசுத்தப்படுத்திய வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஊர் பொதுமக்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வசந்த் (வயது19), சிவசக்தி (22), 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
- மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோச்சடை-மேலக்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கு 2 மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர். மோட்டார் சைக்கிள்களில் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதாசிவம் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, பழனி மகன் ரிஷிகேஷ்(23), அண்ணா நகர் ராமகிருஷ்ணன் மகன் பிரசன்னா(23), தாசில்தார் நகர், வ.உ.சி தெரு குதூப்முகமது மகன் முகமது ஆனஸ்(22) ஆகியோரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்