search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து"

    • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ காரணத்தால் மூடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் தொழிற்சாலையில் இருந்து புகையுடன் தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, என்ன காரணத்திற்காக தீ விபத்து ஏற்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

    ×