search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் காங்கிரஸ் போராட்டம்"

    • காங்கேயம் பி.எஸ். என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • முடிவில் காங்கேயம் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கவின் நன்றி கூறினார்.

    காங்கேயம் :

    மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கேயம் பி.எஸ். என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின்விச்சு தலைமை தாங்கினார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் காங்கயம் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான எஸ்.பி.ஐ., ்எல்.ஐ.சி ஆகியவற்றின் சொத்துக்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. நிர்வாகிகள் மத்திய அரசைக் கண்டித்து பேசினர். திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்குத் தலைவர் ராமசாமி, காங்கேயம் நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ேஹமலதா உள்பட நகர, வட்டார இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சஹாப்தீன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் கோபி, முன்னாள் காங்கேயம் நகர செயல் தலைவர் குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கேயம் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கவின் நன்றி கூறினார்.

    ×