search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.என்.கல்லூரி"

    • எஸ்.என்.கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.
    • சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாரா யணன் கல்லூரியின் 57வது கல்லூரி தினவிழா கல்லூரி செயலர் நாரா யணன் தலைமையில் நடை பெற்றது. துணை முதல்வர் மோதிலால் வரவேற்று பேசினார்.

    முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக, கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் கண்ணதாசன் பேசுகை யில், மாணவர்கள் தனித்திற மைைய வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களும், மதிப்பெண் பட்டியலும் ஒரு சிறந்த வேலை வாய்ப்பை உரு வாக்க முடியாது என்று கூறினார்.

    பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறி னார்.

    • எஸ்.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சரஸ்வதி நாராய ணன் கல்லூரியின் நிறுவனர் தினவிழா கல்லூரி செயலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்.

    முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நிர்மலா மோகன் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்ற தலைப்பில் பேசினார்.

    நாராயணன் செட்டியார் அறக்கட்டளை மூலமாக இக்கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மோதி லால் நன்றி கூறினார்.

    ×