என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Founder’s Day"
- சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் நிறுவனர் தினம் கொண்டாட்டப்பட்டது.
- உதவி பேராசிரியை செண்பகலட்சுமி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகித்தார். முனைவர் சந்திராபோஸ் வரவேற்றார்.
முதல்வர் வளர்மதி பேசினார்.
சிவகாசி எம்.டி.சி. பாலிமெர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாரிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ''எண்ணங்களே மனிதர்கள் வாழ்வில் அடைய போகும் உயரத்தை தீர்மானிக்கும்'' என்ற கருத்தில் சிறப்புரையாற்றினார்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம்.பி.ஏ. முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்காக புத்தக மதிப்பாய்வு, கட்டுரை விமர்சனம், வணிக வினாடி-வினா, வணிகத் திட்டம், சிறந்த மேலாளர், கழிவுகளில் இருந்து செல்வம், தீம் அடிப்படையிலான புகைப்படம், விளம்பர நகல் போட்டி, தினை உணவு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் உதவி பேராசிரியை செண்பகலட்சுமி நன்றி கூறினார்.
- எஸ்.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா நடந்தது.
- இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
சரஸ்வதி நாராய ணன் கல்லூரியின் நிறுவனர் தினவிழா கல்லூரி செயலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்.
முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நிர்மலா மோகன் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்ற தலைப்பில் பேசினார்.
நாராயணன் செட்டியார் அறக்கட்டளை மூலமாக இக்கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மோதி லால் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்