search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி திருவிழா"

    • குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.
    • சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும்.

    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலை மலை முருகன் கோவிலும் ஒன்றாகும். மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா 4-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு எடுத்து செல்வார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள் நடைபெறும். குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

    மாலை 5 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    வார விடுமுறை தினமான நேற்று கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது. அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 2 நாட்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

    பங்குனி மாதம் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இங்கு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.

    நாளை மறுநாள் அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம், பால் காவடிகள் மூலம் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதையடுத்து சுப்பிரமணியசாமி - வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்தமண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

    அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன் மூலம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்சினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை அறுபத்து மூவர் விழா நடக்கிறது.
    • 6-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது.

    28-ந்தேதி பங்குனி பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்பகாம்பாள், கபாலீசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பங்குனி பெருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன் பிறகு கபாலீசுவரர் தேர் புறப்பட்டது. இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.

    அதன் பிறகு கற்பகாம்பாள் தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வந்தன.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வந்தது. தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது.

    தேர் வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 மாட வீதிகளின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்து மயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தேர்த்திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    நாளை (4-ந்தேதி) பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    வருகிற 5-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. 6-ந்தேதி பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    • 9-ந்தேதி வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 13 மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அம்மனாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு்க்கான திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.

    விழாவையொட்டி நாடியம்மனுக்கு கடந்த மார்ச் 28-ந்தேதி காப்பு கட்டி வருகிற 4-ந் தேதி வரை மூலஸ்தானத்தில் இருந்து அன்று இரவு சீவிகாரோகண காட்சியுடன் அம்பாள் கடைத்தெருவில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. 5-ந்தேதியில் இருந்து தினமும் காலை, இரவு இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் அம்பாள் வீதி வலம் நடைபெறுகிறது.

    9-ந்தேதி இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் செட்டியார் தெருவில் வரகரிசி மாலை போடும் விழா நடைபெற உள்ளது. 10-ந்தேதி காலை பல்லக்கு, இரவு ஓலைச்சப்பரம், 11-ந்தேதி காலை புஷ்ப பல்லக்கில் நவநீத சேவை (வெண்ணெய் தாழி) இரவு குதிரை வாகனக்காட்சி நடைபெறுகிறது.

    12-ந்தேதி காலை நாடியம்மன் மூலஸ்தானம் (கோவில்) சென்று மாவிளக்கு மற்றும் காவடி திருவிழாவும் நடைபெறும். 13 மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். 15-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கில் நாடியம்மன் கோட்டைக்கு செல்லுதல் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு இன்னிசை கச்சேரி, நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • பங்குனி திருவிழா 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    திருச்சியை அடுத்த வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தென் தமிழகத்தில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகின்றது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாடல் அருளிய தலமாகும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இந்த கோவிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளதால் சுவாமி திருவீதி உலா கோவிலின் உள்ளே நடைபெறும். அபிஷேகம் மற்றும் இதர அபிஷேகங்களும் நடைபெற உள்ளது.

    வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் பங்குனி உத்திரப் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணிகளை சோமரசன்பேட்டை போலீசார் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர் செய்துவருகின்றனர்.

    • செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடக்கிறது.
    • 4-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முன்னதாக அன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    அப்போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வர தொடங்கியுள்ளனர். மயில் காவடி எடுத்து பக்தர்கள் ஆடி வருகின்றனர்.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கிரிவீதிகளில் மேள, தாளத்துடன் ஆடிப்பாடி உலா வருகிறார்கள். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் மதிய நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    • திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவிலில் அமைந்துள்ள ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவையொட்டி பூக்குழி வைபவம், பால்குடம் எடுத்தல், சாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா 3-ந்தேதி மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.
    • கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது. இதில் நாட்டில் அமைதி வேண்டியும், நல்ல கனமழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடி பெண்கள் வழிபாடு நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வருதல், 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து கோவில் வரை தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தக்கார் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர்.
    • சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை யானைஅமைதியாக நின்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் நவக்கிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகும். இந்த கோவிலில், முருக பெருமான் செல்வமுத்துக்குமார சுவாமியாகவும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.

    இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் போது வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள்.

    அப்போது கோவிலில் தனியாக இருக்கும் முருக பெருமான் (செல்வமுத்துகுமார சுவாமி) க்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடும் என்பது ஐதீகம். இது நாய் ஓட்டம், நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி எனப்படுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான நேற்று பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர். சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை யானைஅமைதியாக நின்றது. பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது.

    நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசு தம்பிரான் கட்டளை முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
    • நம்பெருமாளுக்கு தயிர் சாதம், மாவடு, கீரை வைத்து அமுது படைத்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதைெயாட்டி நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் வழியாக சென்று நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நேற்று காலை நம்பெருமாளுக்கு தயிர் சாதம், மாவடு, கீரை வைத்து அமுது படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நம்பெருமாள் அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் ஆஸ்தான மண்டபம் எதிரில் உள்ள தீர்த்தவாரி குளத்தில் ஜடாரி தீர்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மதியம் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    இதில் ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் பல்லக்கில் புறப்பாடாகி ஜீயபுரம் காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்த நம்பெருமாள், கண்ணாடி அறையில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னொரு காலத்தில் ரெங்கநாதர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பேரன் ரங்கன், முகத்திருத்தம் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டான். இதையடுத்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே கரை ஒதுங்கி உயிர் பிழைத்த ரங்கன், தன்னை காணாது பாட்டி அழுவாள் என்று ரெங்கநாதரிடம் முறையிட்டான்.

    காவிரியில் வெள்ளம் கண்டு அழுது புலம்பிய பாட்டியை ஆறுதல்படுத்த, ஜீயபுரத்து காவிரி கரை அருகே குளித்து எழுந்த நிலையில் ரங்கன் உருவில் நம்பெருமாள் வந்தார்.இதனால் மகிழ்ந்த மூதாட்டி, பேரனை வீட்டிற்கு அழைத்து சென்று பழைய சோறும், மாவடுவும் அளித்தாள். அதனை ரெங்கநாத பெருமாள் சாப்பிட்ட வேளையில், அங்கு ரங்கன் வர, நம்பெருமாள் சிரித்தபடியே மறைந்தார். இதனை நினைவூட்டும் வகையில் நேற்று ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாளுக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் அமுது படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தேரோட்டம் 3-ந் தேதி நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 3-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை அதிகார நந்தி காட்சி மற்றும் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நடந்தது. சாமிக்கு தீர்த்தவாரி, அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் தினமும் காலை பொழுதில் கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி விடை வாகனங்களிலும், இரவு வெள்ளி பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களிலும் சாமி, அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் 3-ந் தேதியும், 63 நாயன்மார்கள் திருவீதி உலா மற்றும் திருஞானசம்பந்தர் சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×