search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி. ஆய்வு"

    • போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்
    • பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 மக ளிர் போலீஸ் நிலையங்கள், 1 குற்றவியல் போலீஸ் நிலை யம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், கலால் 4 போலீஸ் நிலையங்கள் என 55 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த நிலையில் போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க ளின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு திருவண் ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக வளா கத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    அப்போது போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு பராமரிப்பு கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசாருட னான ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இதில் போலீசார், பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என் பது குறித்து அவர் எடுத்து ரைத்தார். மேலும் போலீசா ரின் குறைகளையும் கேட்ட றிந்தார்.

    தொடர்ந்து கடந்த மாதத் தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் சான்றி தழ்களை வழங்கி பாராட்டி னார்.

    அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண் டுகள், இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டார்
    • ஜோலார்பேட்டை ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தும் பதிவேடுகளள், ஆவணங்கள் மற்றும் ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பில் தேவைப்படும் வசதிகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் தாமலேரி முத்தூர் மேம்பாலம், ஜோலார்பேட்டை ஜங்ஷன், சந்தைக்கோடியூர், பொன்னேரி, மண்டலவாடி, கேத்தாண்டப்பட்டி, பச்சூர், உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ஏற்காட்டில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்பனூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
    • வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்தி டியூஷன் எடுத்து வருகிறார்.

    சுற்றுலா

    இந்த நிலையில் நேற்று காலை தன்னிடம் டியூஷன் படிக்கும் 20 மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் உட்பட 30 பேருடன் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றார். அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு நேற்று மாலை குப்ப னூர் வழியாக சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    மரத்தில் மோதி...

    வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பயத்தில் கூச்சலிட்டனர்.

    இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்க ளும், அருகில் இருந்தவர்க ளும் ஏற்காடு போலீசா ருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வேனுக்குள் சிக்கிய மாணவ, மாணவி களை மீட்க தொடங்கினார்.

    படுகாயம்

    சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவ, மாணவிகளை 108 ஆம்பு லன்ஸ் மூலம் வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த னர். படுகாயம் அடைந்த 3 பேர் சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடரும் விபத்துகள்

    மே தினமான கடந்த 1-ந் தேதி, வேலூரில் இருந்து 12 வாலிபர்கள் ஒரு வேனில் ஏற்காட்டிற்கு வந்தனர். அவர்கள் இயற்கையை ரசித்து விட்டு ஊர் திரும்பும்போது கொட்டச்சேடு அருகே வேன் விபத்தில் சிக்கி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல் ஏற்காடு வெள்ளக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மைக்செட் போடுவதற்காக ஈரோடு மாவட்டம் பள்ளிப்பா ளையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு 6 பேர் லாரியில் வந்தனர்.

    அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை குப்பனூர் வழியாக ஊர் திரும்பிய போது, ஆத்துப்பாலம் பகுதியில் லாரி மரத்தில் மோதிய விபத்தில், ஓமலூர் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 3 நாட்களில் நடந்துள்ள, இந்தத் தொடர் விபத்துக்களால் பொதுமக்க ளும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குண்டும் குழியுமாக..

    இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சேலம் அடிவாரம் வழியாக ஏற்காடு செல்லும் பாதை யில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்புச் சுவர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக வாகனங்கள் ஏற்காட்டிற்கு சென்று வருகிறது.

    தற்போது விடுமுறை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குப்பனூர் பாதை குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் அவ்வப்போது ஏற்காட்டில் மழை பெய்வ தால், ஈரப்பதத்தில் வாக னத்தில் உள்ள பிரேக்கு களும் சரியாக பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்துக்கள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    கலெக்டர் ஆய்வு

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் ஆகியோர் விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    • இரவு பூங்கோதை குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • நள்ளிரவு வீட்டுக்கு முன் புறமாக வந்த மர்ம நபர்கள், கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை (வயது 50). விவசாயி.

    பெட்ரோல் குண்டு வீச்சு

    நேற்று முன்தினம் இரவு பூங்கோதை குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வீட்டுக்கு முன் புறமாக வந்த மர்ம நபர்கள், கான்கிரீட் தரையின் மீது பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.

    மர்ம நபர்கள்

    பாட்டில் உடையும் சத்தம் கேட்டு பூங்கோதை குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

    மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளால் தரையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல், அதே பகுதியில் விவசாயி குழந்தைவேல் (52) வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பெட்ரோல் நிரப்பிய 2 பாட்டில்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைவேல் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    போலீஸ் விசாரணை

    இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு, பூங்கோதை மற்றும் குழந்தைவேல் ஆகியோர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலைச்செல்வன், பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது வெடிக்காத பெட்ரோல் குண்டினை போலீசார் கைப்பற்றினர். பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர் சம்பவம்

    ஜேடர்பாளையம் சரளை மேடு, வடகரையாத்தூர், வி.புதுப்பாளையம், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவைப்பு சம்பவங்களும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆங்காங்கே பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தும் இச்சம்பவங்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    சி.பி.சி.ஐ.டி

    மேலும் கரைப்பாளை யத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சாவுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 

    • தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜங்களா–புரத்தில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்–கட்டு நடைபெற உள்ளது.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தில், மேற்கொள்–ளப்–பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜல்லிக்கட்டு நடை–பெறும் மைதானத்தில் வாடிவாசல், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை, மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், இரும்பு தடுப்பு, காளைகள் வெளியேறும் இடத்தில், மைதானத்தை சுற்றிலும் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவருகிறது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கு தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கும் தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் சரியான முறையில் பரப்ப வேண்டும் என்றும், தேவை

    யான ஒலிபெருக்கி அமைப்பு கள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறை களின்படி, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்–கட்டு போட்டி ஏற்பாட்டா ளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சி யில், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா, டி.எஸ்.பி. சுரேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×