என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மயில்கள் உயிரிழப்பு"
- ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
- 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை,
கோவையில் தேசிய பறவையான மயில்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி மயில்கள் உயிரிழ ப்பதை தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.
இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் 2 மயில்கள் சுற்றி வந்தது. பின்னர் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன.
- 2 நாட்களில் மொத்தம் 40 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:
மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
நேற்று முன்தினம் மாலை அந்த காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து கருப்பாயூரணி போலீசார் விரைந்து வந்தனர்.
மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மர்மமான முறையில் இறந்து கிடந்த 18 மயில்களை மீட்டனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிதறி கிடந்த நெல்மணிகளை சேகரித்து, அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் அடுத்தடுத்து மீண்டும் மயில்கள் செத்து கிடந்தன. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து சேகரித்தபோது, 22 மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த மயில்களையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 நாட்களில் மொத்தம் 40 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மயில்கள் செத்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் அங்குள்ள விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பற்றி கருப்பாயூரணி போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்