search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேது பாஸ்கரா கல்லூரி"

    • சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி சார்பில் பாரம்பரிய நடவு திருவிழா நடந்தது.
    • 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் கழணி மரபுவழி உழ வர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் நடவு திருவிழா, இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா என முப்பெரும் விழா எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் நடைப்பெற்றது.

    விழாவில் ஊராட்சி தலை வர் அஜிதா நமச்சிவா யம் வரவேற்றார். சேதுபாஸ் கரா கல்விக் குழுமத் தலை வர் முனைவர் சேதுகுமணன் தலைமை தாங்கி, பாரம்பரிய நெல் நடவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராமப்புற மக்களுக்கு இயற்கை விவசாய பயிற்சிகள் மற்றும் உதவிகள் தம் கல்லூரியின் மூலமாக தொடர்ந்து வழங் கப்படும் என்றும், பால் மதிப்புக்கூட்டுதல், சந்தைப் படுத்துதல் மற்றும் பால் கூட்டுறவு சங்கம் பதி விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

    கல்லல் வட்டார வேளாண்மை இணை இயக் குநர் அழரோஜா, இயற்கை வேளாண்மையில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி னார். சேதுபாஸ்கரா கல் லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கருப்புராஜ் இயற்கை வேளாண்மை இடுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.

    குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய மருத்துவர் ரோமகிருஷ்ணன், கால்நடை களின் முக்கியத்து வம் மற்றும் அரசுத்திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் உழவியல் பேராசி ரியர் முனைவர் விமலேந்தி ரன் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், மண்வளம், நீர் பரிசோதனை குறிந்து விளக்கினார். இவ்விழாவில் 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவர் அர்ஜூன் நன்றி கூறினார்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் குதிரையேற்ற பயிற்சி தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விசாலயன் கோட்டை சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தில் சேதுபாஸ்கரா குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கல்லூரி தாளாளர் சேது குமணன் வரவேற்று நினைவு பரிசுகளை வழங்கினார். கவுரவ விருந்தினர்களாக காரைக்குடி 9 -வது தமிழ்நாடு பட்டாலியன் தே.மா.ப கட்டளை அதிகாரி கர்னல் ரஜ்னிஷ் பிரதாப், முன்னாள் அமைச்சர் தென்னவன், கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், கோயம்புத்தூர் அலெக்சாண்டர் குதிரை ஏற்ற கழக நிறுவனர் சக்தி பாலாஜி, கூட்டுறவு பால் உற்பத்தி சங்க தலைவர் சேங்கை மாறன், சிங்கப்பூர் தொழிலதிபர் துவார்.சந்திரசேகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் நெடுஞ்செழியன், குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், தேவகோட்டை நகர செயலாளர் பாலா, திருப்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட மாணவரணி ராஜ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், திருப்புத்தூர் ஒன்றிய இளைஞரணி புதூர்.கண்ணன், பரணி மற்றும் கல்லூரி பேராசி ரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரிக்கு இஸ்ரேல் பெண் கவிஞர் வருகை தந்தார்.
    • கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற பெண் கவிஞர், கலைஞர் மற்றும் பெண் செயற்பாட்டாளருமான ஜ்மிரா போரான் ஜியான் விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவர் இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றி உள்ளார்.

    சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன், முதல்வர் கருணாநிதி, ஆலோசகர் தர்மராஜ், கல்லூரி உதவிப்பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை வரவேற்றனர். விழாவில் புதுக்கோட்டை மௌன்ட் ஜியான் சர்வதேச பள்ளியின் அறங்காவலர் ஜோனதன் ஜெயபரதன் கலந்து கொண்டார். பின்பு மாணவர்கள் மத்தியில் ஜ்மிரா போரான் ஜியோன் சிறப்புரையாற்றினார். ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழியில்தான் இயற்றிய கவிதைகள் சிலவற்றையும் வாசித்து காட்டினார். முடிவில் கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

    ×