search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சருகு"

    • செடிகளை தீ வைத்து எரித்தபோது மளமளவென எரிந்த தீக்குள் எதிர்பாராதவிதமாக ஆறுமுகக்கண் சிக்கி உடல் கருகி பலியானார்
    • போலீசார் ஆறுமுகக்கண் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகக்கண் (வயது 75), கூலி தொழிலாளி. நேற்று மதியம் இவர் வீட்டு தோட்டத்தில் காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்தபோது மளமளவென எரிந்த தீக்குள் எதிர்பாராதவிதமாக ஆறுமுகக்கண் சிக்கி உடல் கருகி பலியானார்.

    இது குறித்து அவரது மகன் சுப்பிரமணியன் (41) இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகக்கண் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×