என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு தயாரிப்பு"
- பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு தொழிற் சாலைகளில் ஆங்காங்கே வெடிவிபத்துகள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையில் உயிர்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகப்படுத்த பணியை விரைவாக மேற்கொள்வதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதாலும், பாது காப்பான செய்முறைகள் அறியாத புதிய நபர்களை பணிக்கமர்த்தி பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப் படுவதே காரணம் எனத் தெரிய வருகிறது.
சமீபகால உயிரிழப்பு களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விபத்துகளை ஆராய்ந்தும், இதர பாதுகாப்பு கூறுகளை மாநில, மாவட்ட அளவி லான பாதுகாப்பு குழுக்கள், முன்னெடுத்து அவ்வப் போது பரிந்துரைக்கும் விதிமுறைகளை பட்டாசு உற்பத்தி யாளர்கள், விற்பனை நிலையங்கள், குடோன் உரிமையாளர்கள் தவறாது பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.
அரசு வகுத்த சட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு தல்களை பின்பற்றாத நிறுவனங்கள் எதுவும் சிறப்புக்குழு அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் போது அறியப்பட்டால் உற்பத்திக்கு தடை, நிறுவனங்களை மூடுதல் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள், விற்பனை மையங்கள் பாதுகாப்பு விதிமுறைகளையும், உரிய விதிகளின்படி அனும திக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே உற்பத்தி மேற்கொள்வதை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
- வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் பட்டாசு வெடித்து ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த பட்டறை பள்ளத்தெருவில் உள்ள வீட்டில் உரிமம் இன்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், வருவாய் துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பட்டறைபள்ளத் தெருவைச் சேர்ந்த சுகுமார்(41) என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தது தெரிந்தது. கோவில் திருவிழாவிற்காக அவர் பட்டாசு தயாரித்ததாக கூறி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.
வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருத்தங்கலை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மரத்தடியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து எம்.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து போர்மேன் இளங்கோவனை கைது செய்தார்.
திருத்தங்கல் பாண்டியன் நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பள்ளி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திறந்த வெளியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஃபோர்மேன் கணேசனை கைது செய்தனர்.
சேதுராமலிங்காபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள கோழிப்பண்ணை பகுதியில் உள்ள தகரசெட்டில் அந்தோணிராஜ்(55), அக்கினிராஜ் (26) ஆகியோர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்