search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிட்ஜ் வெடிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சபரிநாத் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார்.
    • நேற்று காலை சபரிநாத் தங்கியிருந்த மாடி வீட்டில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. திடீரென அங்கிருந்து புகையும் கிளம்பி வந்தது.

    கோவை:

    சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சபரிநாத். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி ஆகும்.

    சபரிநாத் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட வீடு கட்டி வசித்தார். சபரிநாத்தின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது 15 வயது மகன் உறவினர் வீட்டில் வசிக்கிறார்.

    சபரிநாத்தின் கீழ் வீட்டை கணவரை பிரிந்து வாழும் சாந்தி (37) என்ற பெண்ணுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தால் சபரிநாத் மேல் தளத்தில் தங்கிக் கொள்வார்.

    அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சபரிநாத் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். நேற்று காலை அவர் தங்கியிருந்த மாடி வீட்டில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. திடீரென அங்கிருந்து புகையும் கிளம்பி வந்தது.

    அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அப்போது மாடி வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனை உடைத்துக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அங்கு பரவியிருந்த தீயை போராடி அணைத்தனர்.

    புகை வெளியேறிய பின் பார்த்தபோது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி கருகிக் கிடந்தது. சமையல் அறையில் இன்ஸ்பெக்டர் சபரிநாத்தும், கீழ் வீட்டில் வசிக்கும் சாந்தியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    சாந்தி, சபரிநாத்துக்கு சமையல் செய்து கொடுக்கச் சென்றதாகவும், அப்போது குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. சபரிநாத்தும், சாந்திக்கும் என்ன மாதிரியான பழக்கம் இருந்தது, அந்த பழக்கத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தற்கொலை முடிவு எதுவும் எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு முழுக்க சமையல் கியாஸ் பரவி இருந்துள்ளது, இதனால் 2 பேரில் யாராவது ஒருவர் கியாசை திறந்து விட்டு தற்கொலை முயற்சி எடுத்து குளிர்சாதன பெட்டி வெடித்ததா அல்லது மின் பிரச்சினை காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்ததா? என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

    சபரிநாத்துக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் எதாவது விபரீத முடிவை எடுத்தாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பலியான சபரிநாத் மற்றும் சாந்தியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தில் சபரிநாத், சாந்தி ஆகியோர் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.
    • இன்ஸ்பெக்டர் வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான பொள்ளாச்சி நல்லூருக்கு சென்றார். இங்கு தனது உறவினர்களை சந்தித்து விட்டு தனது வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது கீழ் வீட்டில் வசித்து வரும் சாந்தி(37) என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத்தின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அவர் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. அறைக்குள் மட்டும் பற்றி எரிந்த தீ சில நிமிடங்களில் வீடு முழுவதும் பரவி எரிந்து கொண்டிருந்தது.

    இந்த தீ விபத்தில் சபரிநாத், சாந்தி ஆகியோர் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.

    அப்போது அவர்களது உடலிலும் தீ பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

    இதற்கிடையே இன்ஸ்பெக்டர் வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிற்குள் சபரிநாத்தும், சாந்தியும் உடல் கருகி பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது, குளிர்சாதன பெட்டி வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் குளிர்சாதன பெட்டி வெடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×