search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரப்பன்கோவில்"

    • சங்கையா சந்தி வீரப்பன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் சங்கையா சந்தி வீரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மதுரை கணபதி பட்டர் தலைமையில் யாகவேள்வி நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பிரசன்னா மூர்த்தி, செயலாளர் பரந்தாமன், பொருளாளர் நீதிவளவன், பரம்பரை பூசாரி தினகரன், ரமணன் ஆகியோர் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து சங்கையா சந்திவீரப்பன் உள்பட அங்காள பரமேசுவரி சங்கிலி கருப்பன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×