என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புத்தாக்க மேம்பாடு நிகழ்ச்சி"
- புத்தாக்க மேம்பாடு நிகழ்ச்சி பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
- தொழில் தொடங்கும் முயற்சியுடன் வங்கியை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தனர்.
பேராவூரணி:
தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மையமான அரசினர் பாலி–டெக்னிக் கல்லூரி திருச்சி சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாடு நிகழ்ச்சியை தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி அரசினர் பாலி–டெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.தமிழ்ச்செல்வன், மைய ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தொழில் முனைவு வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்–பாளரும் துணை முதல்வருமான கணேசன் வரவேற்பு உரையாற்றி, இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் எம்.மதிவாணன் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர்கள் எஸ்.சத்யா மற்றும் அரவிந்தன் ஆகியோர் பங்கு பெற்று மாணவர்களிடம் தொழில் தொடங்கும் முயற்சியுடன் வங்கியை எவ்வாறு அணுக வேண்டும், வங்கியில் அரசின் சலுகைகள் பற்றி எடுத்துரைத்தனர்.
மேலும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜிபிஎம் ப்ராடக்ட்ஸ் நிறுவ–னத்தை நடத்தி வரும் தொழில் முனை–வோர் லோகேஷ், மாணவர்களிடம் தொழில் முனைவர்களாக எவ்வாறு உருவாக வேண்டும் என்று ஊக்குவித்து கருத்துக்களை எடுத்துரைத்தார்.
முடிவில் கல்லூரி முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் கனிமொழி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்