என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீன்குட்டை"
- வீட்டின் அருகே உள்ள மீன்குட்டையில் தவறி விழுந்துள்ளார்.
- அசம்பாவிதங்கள் இனி ஏற்படாமல் தடுக்க மீன்குட்டையை உடனடியாக மூடவேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை மேலையூர் அய்யர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் அபினேஷ் (வயது17). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அபினேஷ், தனது வீட்டின் அருகே உள்ள மீன்குட்டையில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அபினேஷ் இறந்தது விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சாலையோரத்தில் எவ்வித பாதுகாப்பு இன்றியும் மீன்குட்டை அமைத்ததால் தான் அபினேஷ் தவறி விழுந்து இறந்துள்ளார்.
எனவே மீன்குட்டை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்று அசம்பாவிதங்கள் இனி ஏற்படாமல் தடுக்க மீன்குட்டையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை குண்டுகட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து செம்பனார்கோயில் மேல் முக்கூட்டில் சி.பி.ஐ.கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் சங்கமித்திரன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.
இசம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா, தரங்கம்பாடி தாசில்தார் இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியலை கைவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்