search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம்"

    • அரசுத் துறைஅலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • மாநகராட்சியின் பல்வேறு இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார்ஜி.கிரியப்ப னவர், தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகவளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடுமையத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அரசுத் துறைஅலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டு ப்பாடு மையம் அமை க்கப்பட்டு அதன் மூலம்ப ல்வேறு பணிகள் மே ற்கொள்ளப்பட்டு வரு கிறது.ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டு ப்பாடு மையத்தில் பொதுமக்கள்தங்களது பல்வேறு வகையான கோரிக்கைகளை "ஒரு குரல் புரட்சி" திட்டத்தின் கீழ்155304 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பொழுது, அந்தகோரிக்கையின் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவடி க்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த மையத்தி ல் உள்ள தகவல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைகொண்டு மாநகராட்சியின் பல்வேறு இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் தூய்மை பணிவாகனங்கள், அலுவலக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களின் செயல்பாடுகள் ஜி.பி.எஸ்.கருவி மூலம் கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    மேலும் வருகை பதிவேடு, எரிபொருள் பயன்பாடு உட்பட பல்வேறு பணிகள்இந்த மையத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,மின்சார வாரியம், தீயணைப்பு துறை, உட்பட பல்வேறு இன்றியமையாத அரசுத்து றைகளை ஒன்றிணைத்து பொதுமக்களின் அடிப்படைத்தேவைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை உறுதி செய்ய திருப்பூர்மாநகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம்செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    ×