search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்க்கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி"

    • மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்க ளிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமித த்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோ றும் நடத்தப்பட்டு வருகிறது.

    நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பா ட்டின் செழுமையையும், சமூகசமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டு க்கான வாய்ப்புகளையும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விகழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்ப ட்டுள்ளது.இத்திட்டத்தி ன்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப்பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல்ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழி ல்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் யாமறிந்த புலவரிலே என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா , மானுடம் வெல்லும் என்ற தலைப்பில் ஊடகவியலா ளர் குணசேகரன் சொற்பொழிவாற்றினர். திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இத்திட்டம் குறித்த நோக்கவு ரையை வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 9 கல்லூரிகளை சார்ந்த சுமார் 1150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலு க்கான கையேடும், தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது.

    இதில் தமிழ் பெருமிதம் கையேட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒருநிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி என்கின்ற பட்டத்தோடு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கா ன வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த கண்காட்சி, நான் முதல்வன் திட்டம் குறித்த கண்காட்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன் உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத்தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும் சுயஉதவி குழுக்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்ப ட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பல்லவி வர்மா , சமூக பாதுகாப்பு த்திட்ட தணித்துணை ஆட்சியர் அம்பாயிரநாதன், கல்லூரி முதல்வர் ராஜே ஸ்வரி, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×