என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீப்பந்தம்"
- 1001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது.
- களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நாராயணபுரம் மற்றும் கல்லுபட்டி கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வரும் முத்தாலம்மனுக்கு பாரம்ப ரிய முறைப்படி முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னதாக திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கி யது. இக் கிராமத்து மக்கள் பிடிமண் எடுத்து ஊர்வலமாக சென்று, சிலை செய்யும் இடத்தில் அம்மன் சிலை செய்வதற்கு பிடிமண்ணை கொ டுத்தனர். பின்னர் சிலை செய்யபட்டு நேற்று முன்தினம் இரவு முத்தா லம்மன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழாவில், 2கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் 1001 தீ பந்தங்கள் ஏந்தி, முத்தா லம்மன் சிலை செய்யப்பட்ட கண்ணார்பட்டியில் இருந்து அம்மன் கண்ணை கட்டி ஊர்வலமாக, கமுதி பஸ் நிலையம் வழியாக மேள தாளம் வான வேடிக்கை யுடன், நாராயணபுரம் கொண்டு சென்றனர்.
பின்னர் மாலை களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.
நாகரீக காலத்தில் மின் சீரியல் விளக்குகள், அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் நாராயணபுரம், கல்லுபட்டி கிராமமக்கள் இன்னும் பழைய பழக்கத்தை மாற்றாமல் முத்தாலம்மன் திருவிழாவை தீ பந்தம், மேளம், வானவேடிக்கை களோடு கொண்டாடி வருகின்றனர்.
- முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம்.
- சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஜனநாயகத்தை காப்போம் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவி சித்ரா செல்வி தலைமை வகித்தார்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன், கொள்ளிடம் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரையாற்றினார்.
இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரியகுமார், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் காங்கிரஸ் துணைத் தலைவர் செலினா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்