என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமநவமி விழா"
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராமநவமி விழா நடந்தது.
- இதில் ஏராளமான பெண்கள் உள்பட உபநிஷர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் 57-வது ஆண்டு ராம நவமி விழா நடந்தது.
முதல் நாள் ராமஜனம் லட்சார்ச்சனையுடன் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆழ்வார்கள், தாசர்கள் உபன்யாசம் நடத்தப்பட்டது. 9-ம் நாளில் சீதா கல்யாணம் நடந்தது. சென்னை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினர் சீதா கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர்.
மாலையில் காயத்ரி ரகுராம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நாளை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. தினமும் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் உள்பட உபநிஷர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சன்னதியில் இருந்து கோதண்டராமர் வில்லேந்திய கோலத்தில் வலம் வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
பின்னர் தீட்சிதர்கள் கொடிக்கு பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் திருக்கல்யாண சேவையில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) வெள்ளி சேஷ வாகனத்திலும் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
2-ந் தேதி கருடசேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்