search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநீர் அபிஷேகம்"

    • காலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
    • 1 மணிக்கு பக்தர்ளுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளார். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.

    இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்துள்ளது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி நேற்று ஸ்ரீ குகநாதீஸ்வரர் பெருமானுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. இதை யொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.

    அதைத் தொடர்ந்து 7 மணிக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு குகநாதீஸ்வரருக்கு எண்ணெய், மஞ்சள் பொடி, களபபொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து 10 மணிக்கு மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ளஸ்ரீ குகநாதீஸ்வரர் பெருமானுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. பின்னர் பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 1 மணிக்கு பக்தர்ளுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னி யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள்பேரவையினர் செய்துஇருந்தனர்.

    ×