search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் மனு"

    • அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம்.
    • அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம். ஒரு அறை 2 கழிவறை உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையும் சரி செய்வதில்லை.

    இந்த நிலையில் விடுதியை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் கூறி வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் எங்களையும், பெற்றோரையும் தரக்குறைவாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணை என்ற பேரில் குற்றவாளிகளை போல் நடத்தினார்.

    இதனால் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பஸ் ஏறி கல்லூரி வருவதற்கு, 3 முதல், 4 மணி நேரம் ஆகிறது.
    • இரவு பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் செல்ல, 200 ரூபாய் ஆகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பீமகுளம், நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகில் உள்ள பனைமரியாளம், கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாங்கள் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ளோம்.

    ஒவ்வொருவரும் சுமார், 60 கிலோ மீட்டர் முதல், 120 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு தினமும் வந்து செல்கிறோம். எங்கள் கிராம பகுதிகளில் இருந்து பஸ் ஏறி வருவதற்கு, 3 முதல், 4 மணி நேரம் ஆகிறது.

    தினமும் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல இரவு 10 மணி ஆகிறது. மேலும் எங்கள் கிராமத்திற்கு செல்லும் இரவு பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் செல்ல, 200 ரூபாய் ஆகிறது.

    எங்களுக்கு கிருஷ்ணகிரியில் விடுதி வசதி கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தினமும் மாணவ, மாணவிகள் பாப்பாரப்–பட்டிக்கு வருவது என்றால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தங்களை தயார் செய்து கொண்டு 11 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும்.
    • மாணவ, மாணவிகள் காலை உணவு எடுத்து கொள்ளாமல் பாதி வழியில் மயங்கி கீழே விழுந்து அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலி பஞ்சாயத்து மலையூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    சாலை வசதி-பஸ் வசதி

    பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூருக்கு மலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த ஊருக்கு செல்ல சரியான சாலை வசதி கிடையாது.

    மலையூரில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டிக்கு தினமும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் நடந்து வந்தும் அல்லது இருசக்கர வாகனங்கள், சைக்கிளில் வந்து பஸ் ஏறுவார்கள்.

    பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் மனு

    இந்த நிலையில் மலையூரில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்து அரசு பள்ளியில் படிக்கும் அரசு மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியை அடுத்த பிக்கிலி பஞ்சாயத்து மலையூர் கிராமத்தில் குடும்பத்துடன் நாங்கள் வசித்து வருகின்றோம். மலையூரில் தார்சாலை வசதி ஏற்படுத்தி 11 ஆண்டுகளாகின.

    ஆனால்,இதுவரை மலையூரில் பஸ் போக்குவரத்து வசதி கிடையாது. நாங்கள் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளிக்கு வருவது என்றால், 11 கி.மீ. தூர தொலைவில் நடந்து வந்துதான் பள்ளிக்கு வரவேண்டிய அவலநிலை உள்ளது.

    மேலும், அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு தான் பள்ளிக்கு விரைந்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. தினமும் மாணவ, மாணவிகள் பாப்பாரப்–பட்டிக்கு வருவது என்றால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தங்களை தயார் செய்து கொண்டு 11 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும். அவ்வாறு வரும் மாணவ, மாணவிகள் காலை உணவு எடுத்து கொள்ளாமல் பாதி வழியில் மயங்கி கீழே விழுந்து அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    வனவிலங்குகள் அச்சுறுத்தல்

    மேலும், சிலருக்கு அல்சர் போன்ற நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். இதேபோன்று மாலையில் வீடு திரும்பும்போது பள்ளி மாணவிகளுக்கான தங்களுக்கு வன விலங்கு–களால் அச்சுத்தலும் ஏற்படுகிறது. எனவே, எங்களது பாதுகாப்பு கருதி மலையூர் கிராமத்திற்கு உடனடியாக பஸ் போக்கு–வரத்து வசதி கொடுக்குமாறு கேட்டுக் கெள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    ×