search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து."

    • 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் விடுதியில் உள்ள குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தீவிபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து, தீயில் சிக்கியிருந்த 5 பெண்களை மீட்டனர். இதில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இன்று காலை 6 மணியளவில் குடோனில் இருந்த கரும்புகை வந்தது.
    • பஞ்சு மெத்தை குடோனில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேரம் போராடி அனைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை மேட்டை சேர்ந்தவர் முகமது சேக் (வயது 48).

    இவர் கோவைப்புதூர் அருகே உள்ள அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இன்று காலை 6 மணியளவில் குடோனில் இருந்த கரும்புகை வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் 10 பேர் 4 லாரிகளில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பஞ்சு மெத்தை குடோனில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேரம் போராடி அனைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசமானது.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×