என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "10th Class Exam 10-ம் வகுப்பு"
- 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
- இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது.
சேலம்:
தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி தேதி நிறைவடைந்தது. அதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ந்தேதி தொடங்கி, . இன்று முடிவடைந்தது.
இதை தொடர்ந்து 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. சேலம் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 44 ஆயிரத்து 564 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும், 368 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 200 முதன்மை கண்காணிப்பாளர்கள், 200 துறை அலுவலர்கள், 3211 அறை கண்காணிப்பாளர்கள், 250 பறக்கும் படை உறுப்பி னர்கள், 20 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள், என மொத்தம் 4000 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்க ளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்