என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The program of dropping the pole கம்பம்"
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.அபிஷேக ஆராதனை, வழிபாடுகள், சக்தி அழைத்தல், கும்பம் தாளித்தல், பூச்சொரிதல் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருச்செங்கோடு தெப்பக்குளத்தை அடைந்தது. பூசாரியும், பக்தர்களும் தெப்பக்குளத்தில் கம்பத்தை பூஜை செய்து வழிபட்டு குளத்தில் விட்டனர். ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக வேடமிட்டு ஆடி படி ஊர்வலமாக வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்