search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள். Straw"

    • மேலூர் அருகே கோவில் திருவிழாவில் உடலில் வைக்கோல் பிரி சுற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    • சிறுவர்கள் உடலில் வேஷம் பூண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக ஆண்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி பூதம் போல வந்தனர். சிறுவர்கள் உடலில் வேஷம் பூண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

    முன்னதாக ஊர் பெரிய கோவிலில் இருந்து மந்தையம்மன் கோவிலுக்கு ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அங்கு பெண்கள் உரலில் பச்சரிசி மாவு இடித்து அதனுடன் சர்க்கரை கலந்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு சமமாக வழங்கப்பட்டது. இதுபோன்று விழா கொண்டாடுவதால் மழை பெய்து விவசாயம் செழித்து, மக்கள் நோய்நொடியின்றி வாழலாம் என்பது இந்த பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.

    ×