என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முப்பிடாறி அம்மன்"
- நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது.
- 9-ம் நாளான இன்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
சுரண்டை:
சுரண்டை சிவகுரு நாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமைக்கமிட்டி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாறி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் இரவில் சிறப்பு பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ முப்பிடாறி அம்மன் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. பின்னர் சிவகுருநாதபுரம் காமராஜ் சிலம்பாட்ட குழுவினர் சிலம்பாட்டம் நடந்தது. 8-ம் திருநாளான நேற்று இரவு 7 மணிக்கு வில்லிசை, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து மெல்லிசை கச்சேரி நடைபெறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்