search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பணி குழு"

    • காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஊமை காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.

    இந்த விழாவையொட்டி முதல் நாள் இரவு 10 மணிக்கு பெரிய கிணற்றில் இருந்து பூங்கரகம் ஜோடித்து மேளதாளம் முழங்க கோவிலை வந்தடைந்தது. 2-ம் நாள் பொங்கல் வைத்து தீச்சட்டி எடுத்து மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    3-ம் நாள் முளைப்பாரியோடு ஊர்வலமாக சென்று அம்மன் பூஞ்சோலை அடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    4-ம் நாள் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×