search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியின் போது"

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    தீயணைப்பு துறையில் பணியின் போது எதிர்பாராத விதமாக இறந்து வீரமரணமடையும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மரியாதை செலுத்தப்பட்டு வருவதோடு ஒரு வாரகாலத்திற்கு தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்படுவது வழக்கமாகும்.

    இந்நிலையில் இன்று ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இறந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமை தாங்கி உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இதில் நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

    இதேபோல பவானி, சென்னிமலை, மொட க்குறிச்சி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலும் மரியாதை செலுத்தப்பட்டது. 

    ×