search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைத்ரி மூவி மேக்கர்ஸ்"

    • நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் இதுவரை அஜித்தை பார்த்திராத லுக்கில் இருந்தார். தற்பொழுது படத்தின் செக்கண்ட் லுக் `காட் பிளஸ் யூ மாமே' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் கழுத்தில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டும் 63 என்ற எண்ணுடைய சிறை சீருடை மற்றும் கண்ணில் கூலர்ஸ் அணிந்து ஸ்வேக்-காக உள்ளார்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் அணிந்திருக்கும் கண்ணாடியில் பில்லா அஜித்தின் புகைப்படம் இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எம்மாதிரியான கதையை இயக்குகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்திற்கு சென்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
    • குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார்.

    விடாமுயற்சி படத்தைத் தாண்டி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்பட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த படத்தின் 2-வது லுக் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார்.
    • படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.

    மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டானார்.

    விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொன்றியுள்ளது.

    கடந்த மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர். அஜித் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று நேற்று முடிவடைந்த நிலையில் . இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தில் மலையாள நடிகர் பிரேமலு புகழ் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெலியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று ஜூனியர் என்.டி.ஆர் அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • ரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அடுத்து படம் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார்.

    ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபல நடிகர்களுள் ஒருவராவார். இன்று ஜூனியர் என்.டி.ஆர் அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரமாண்டமான கே.ஜி.எஃப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் உடன் அடுத்து படம் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இது என்.டி.ஆர் நடிக்கும் 31 - வது திரைப்படமாகும். அதனால் இப்படத்திற்கு தற்காலிகமாக #NTR31 என பெயரிடப்பட்டது.

    என்.டி. ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களது எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் #NTRNEEL  எனவும் `ஹேப்பி பர்த்டே மேன் ஆஃப் மாஸஸ் என்.டி.ஆர்' என அப்பதிவில் பதிவிட்டுள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர். என்.டி.ஆர் நடித்திருக்கும் தேவரா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .
    • இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

    மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .

    விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.

    இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார். மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிரது. படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

    அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை" என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.
    • இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் "சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை" என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. 1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.

    பான் இந்தியன் படமாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது. முன்னதாக விஜய் தேவரகொண்டாவை வைத்து, டியர் காம்ரேட், குஷி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. 

    விஜய் தேவரகொண்டா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. சூப்பர் ஹிட்டான டாக்ஸிவாலா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சுகுமார் தற்போது 'புஷ்பா -2' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரித்துறை சோதனை நடந்தி வருகிறது.

    மேலும், 'புஷ்பா' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×