search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்ஏ சோதனை"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவை மாற்ற வேண்டும், இந்தக் குழு எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கை வயல் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இவர், கடந்த ஆண்டு வேங்கை வயலுக்கு சென்று கள ஆய்வு செய்ததுடன், கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அந்த விசாரணை அறிக்கையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் அனுமதியுடன் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது. இந்நிலையில் 31 பேரின் டி.என்.ஏ. பரிசோதனை கடந்த பல நாட்களாக நடைபெற்று வந்தது.

    இந்த பரிசோதனை முடிவு இன்று கொடுக்கப்பட்டது. அதில் 31 பேரின் டி.என்.ஏ. ஒத்துப்போகவில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் விசாரணையில் மிகப்பெரிய பின்னடைவு பெற்றுள்ளது.

    • இதுவரை 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மனித மலம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாமல் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த சம்பவத்தினை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ச்சியாக அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தாமதமாகி வருகிறது. ஓராண்டை கடந்தும் இயல்பு நிலை இன்னமும் திரும்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

    எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை தேவை. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தில் சாதிப்பிளவுகள் இன்னும் ஆழமாகியுள்ளன என வேதனை தெரிவித்தார்.

    சி.பி.சி.ஐ.டி. துணை போலி சூப்பிரண்டு பால்பாண்டி கூறும்போது, இந்த விவகாரத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    இவர்களில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றார்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறுகையில், கடந்த வாரம் நாங்கள் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்றோம். ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த வழக்கினை திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக சந்தேகிக்கின்றோம்.

    இப்போதும் தலித் மக்கள் அதிக பயத்தில் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தோம், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

    சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. முடிவு இல்லாத தொடர்கதை போல நீளும் வேங்கை வயல் வழக்கு விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஏற்கனவே மரபணு சோதனை செய்த 30 பேரில் 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

    அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10 பேர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க கோர்ட்டு திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

    • மரபணு சோதனை 25 பேரிடம் நடத்திய நிலையில் மேலும் 6 பேருக்கு நடத்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
    • மரபணு சோதனை முடிவு மற்றும் ரத்த கூறுகள் சென்னையில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மரபணு சோதனை 25 பேரிடம் நடத்திய நிலையில் மேலும் 6 பேருக்கு நடத்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    கடந்த 6-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து 6 பேருக்கு மரபணு சோதனை இன்று நடத்தப்படுகிறது. இதற்காக தொடர்புடைய 6 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்களது ரத்த மாதிரி மரபணு சோதனைக்காக எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் மரபணு சோதனை முடிவு மற்றும் ரத்த கூறுகள் சென்னையில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    தடய அறிவியல் பரிசோதனைக்கு தேவையான கூறுகளை விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொண்டு வந்து கொடுக்க உள்ளனர். அதன் பின்னர் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தெரிய வரும்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வேங்கை வயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் 4 சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி முன்னிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

    • முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர்.
    • இதுவரை 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அசுத்தம் கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் ரீதியான தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரிகளை சேகரித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை மூலம் அறிக்கை பெறப்பட்டது. இதேபோல விசாரணை நடத்தியவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் முதல்கட்டமாக வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் அனுமதி பெற்றனர். பின்னர் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்து வந்தனர். அவர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேர் வர மறுத்த நிலையில், அவர்கள் பரிசோதனைக்கு எதிர்ப்பு தொிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் வாதிட்டனர். இதில் 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் அனுமதி பெற சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேருக்கும் பரிசோதனைக்கு அனுமதி கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதன்படி அந்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவுபடி அந்த 8 பேரும் அதாவது சுபா, இளவரசி, ஜானகி, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை 11.30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட மாதிரிகளை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    இந்த வழக்கில் இதுவரை 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடிக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இதையடுத்து நேற்று புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த மாதிரி சேகரிப்புக்கு 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 8 பேரும் ரத்த மாதிரி தர மறுத்துவிட்டனர். அவர்கள் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். எனவே சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டுமின்றி நேற்று ரத்த மாதிரி தர மறுத்த 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
    • 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆயுதப்படை காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்துள்ளனர். மற்ற 8 பேர் ரத்தம் தர வரவில்லை. அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் இந்த பிரச்சினையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். மீண்டும் இதுபோன்ற சோதனை என்ற பெயரில் எங்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரத்த மாதிரி கொடுத்தவர்களின் பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் உள்ளூர் போலீசார் விசாரணையை அடுத்து, வழக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக வாட்ஸ்அப் உரையாடல் அடிப்படையில் ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேரிடம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தநிலையில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய அனுமதியை பெற்றனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்காக வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. பின்னர் அவை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இந்த பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க அவர்கள் கூடுதல் கால அவகாசமும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேரில் ஆஜரானார்கள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த ஒரு அவலம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்து விட்டு சென்றனர். இதனை பருகிய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.

    சம்பவம் நடந்த 20 நாட்களாக அங்கு முகாமிட்டு இருந்த தமிழக போலீசார் சுமார் 120 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனாலும் தற்போது வரை இந்த இழிவு செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.

    இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுக்க தொடங்கினர்.

    அதேபோல் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வேங்கைவயல் கிராமத்தின் நுழைவு பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் டெண்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவானது 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    அதன் அடிப்படையில் இன்னும் ஒருசில நாட்களில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து, அதில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு, அரசு ராணியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் தலைமையில் இந்த டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்வதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகும் என்றும், அதன் மூலம் இந்த பிரச்சினையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் உண்மை குற்றவாளிகளும் கைதாவார்கள்.

    இந்நிலையில் சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த முரளி ராஜா, கண்ணதாசன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக இந்த டி.என்.ஏ. சோதனை வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கீழமுத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×