என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எரிந்த மரங்கள்"
- அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.
- ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதி உள்ளது.
இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
தொடர்ந்து, இடி, மின்னலின் சத்தம் அதிகமாகவே இருந்தது. அப்போது, தனியாருக்கு சொந்தமான அந்த எஸ்டேட்டில் பயங்கர வெடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது.
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.
தீ வேகமாக அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியை புகைமூட்டமாக காணப்பட்டது.
இதை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள், தோட்டத்தில் இந்து மோட்டார் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்