என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முற்றிலும் எரிந்து சேதம்"
- வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
- சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஓடக்கா ட்டை சேர்ந்தவர் வெங்க டேஷ் (45). ரியல் எஸ்டேட் அதிபரான வெங்கடேஷ் விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மனைவி வசந்தி. கோபி அருகே மொடச்சூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் நவீன்.
வெங்கடேஷ் அதே பகுதியில் தோட்டத்திலேயே சுற்றிலும் சுவராலும், மேற்கூரை தென்னை ஓலையால் அமைத்து அதன் மேல் தகர சீட் அமைத்து உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் தொழில் விசயமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் வெங்கடேசின் தந்தை பெருமாள், தாயார் பாவாயம்மாள் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மதியம் திடீரென வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பெருமாளும், பாவா யம்மா ளும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர்.
அதற்குள் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அருகில் இருந்த வர்கள் தீயை அணைக்க முயன்ற போது தென்னை ஓலையால் மேற்கூரை அமைக்கப்பட்டதால் தீ மளமளவென பரவியது. இதனால் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து நம்பியூர் தீயணைப்பு த்துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ மளமள வென பரவி வீட்டில் பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 3 லட்சம் ரொக்க பணம், தோட்டத்தின் பத்திரங்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சமையல் பொருட்கள் என சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.
தீ விபத்து ஏற்பட்ட போது ஓலையால் மேற்கூரை அமைத்து அதன் மீது இரும்பு தகர சீட் போடப்பட்டு இருந்ததால் தீயை உடனடியாக அணை க்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்த போது சுவர்களும் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்க ளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
தீ விபத்தின் போது வீட்டில் இருந்த பெருமாள் மற்றும் பாவாயம்மாள் ஆகியோர் உடனடியாக வீட்டை விட்டு வெளி யேறியதால் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினர்.
இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்