என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாட்ஜில் தங்கியிருந்த"
- அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.
- அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள நேதாஜி சவுக் பகுதியை சேர்ந்தவர் விக்கிமுக்தா (32). இவரது தந்தை அருண்பரசுராம் முக்தா (62). ஜவுளி வியாபாரிகள்.
இவர்கள் இருவரும் அடிக்கடி ஈரோடு வந்து ஜவுளி கொள்முதல் செய்து கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஜவுளி கொள்முதலுக்காக ஈரோடு வந்த இருவரும் பஸ் நிலையம் பின்புறம் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர்.
இதில் அருண்பரசுராமுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்து ள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை விக்கிமுக்தா கண் விழித்து பார்த்த போது அவரது தந்தை அருண்பரசுராம் முக்தா அசைவற்று இருந்துள்ளார்.
உடனடியாக விக்கிமுக்தா அவரை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று ள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்பரசுராம் முக்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- சுந்தரம் எவ்வித அசைவுமின்றி படுத்திருந்தார்.
- உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் டி.ஜி.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). ஜவுளித்தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் திருச்சி தென்னூரை சேர்ந்த சுந்தரம் (80). இவர் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ரவிச்சந்திரனும், சுந்தர மும் நண்பர்கள். இதனால் ரவிச்சந்திரன் கடந்த 2016-ம் ஆண்டு சுந்தரத்தை அழைத்து வந்து ஈரோட்டில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்து ஜோதிட தொழில் செய்ய உதவி செய்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சுந்தரத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ரவிச்சந்திரன், சுந்தரத்தை பார்ப்பதற்காக அவர் தங்கி இருந்த லாட்ஜு க்கு வந்துள்ளார்.
அப்போது கதவு உள்பக்கமாக தாழி டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரம் எவ்வித அசைவுமின்றி படுத்திருந்தார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுந்தரத்தின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்