search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The thief was arrested. திருடியவர்"

    • சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார்.
    • கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவருக்கு கடந்த 12-ந்தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மொபட்டில் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார். கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த ெமாபட் திருட்டு போனது. இது குறித்து மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் நைசாக மொபட்டை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அஜித்குமாரை கைது செய்தனர்.

    ×