search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு"

    • விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 36 ஆயிரத்து 475 எண்ணிக்கையிலான 14 ஆயிரத்து 860 கிலோ எடை யுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ 21.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.15 காசுகள், சராசரி விலையாக ரூ22.75 காசுகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 336-க்கு தேங்காய் விற்பனையானது.


    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

    அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 142 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய் குறைந்தபட்சமாக 66 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 74 ரூபாய்க்கும், சராசரியாக 73 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மொத்தம் 48 குவிண்டால் நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டு ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.

    ×