search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பங்கேற்பு"

    • பல்வேறு விளையாட்டுகளுக்கான பொருட்கள் போடப்பட்டுள்ளது.
    • பூங்காவில் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்கின்றனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டா முத்தூர் சாலையில் கிருஷ்ணாம்பதி குளம் உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளத்தின் குளக்க ரைகள் தூய்மைப்ப டுத்தப்பட்டு நடைபாதை, குழந்தைகள் விளையாடி மகிழ பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்க ப்பட்டுள்ளது.

    இதுதவிர பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் குழந்தை களுக்கு பிடித்தமான ஊஞ்சல், சறுக்கு விளை யாட்டு உள்பட பல்வேறு விளை யாட்டுகளுக்கான பொரு ட்கள் போடப்ப ட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். இதுதவிர காலை, மாலை நேரங்களில் ஏராள மானோர் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது கோடை விடு முறை விடப்பட்டுள்ளதால் இந்த குளத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் அதிகரித்து விட்டது. சீரநாயக்கன் பாளையம், பூசாரிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக வர தொடங்கி யுள்ளனர்.

    அவர்கள் தங்கள் குழந்தை களுடன் குளக்கரைகளில் அமர்ந்தும், அங்குள்ள பூங்காவில் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்கின்றனர்.

    தற்போது இங்குள்ள நடைப்பாதையில் புற்கள் அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக அந்த புற்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×