என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செய்யாற்றில் பிணம்"
- முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?
- போலீஸ் விசாரணை
சேத்துப்பட்டு:
திரு வண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் இடுகாடு மற்றும் சுடுகாடு இரண்டும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் வெள்ளம் செல்கிறது.
இதனை தொடர்ந்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வெள்ளத்தைக் காண சென்றனர். அப்போது ஆற்று வெள்ளம் நடுவே தண்ணீரில் ஆண் உடல் முழுவதும் புதைந்த நிலையில் கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது.
இதனால் ஆற்று வெள்ளத்தைப் பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூழ்கிய நிலையில் கிடந்த உடலை பார்த்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்க ப்பட்டது. அதன் உதவியுடன் ஆற்றில் புதைந்திருந்த உடலை தோண்டி கரைக்கு எடுத்து வந்தனர்.
இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவரை மர்ம கும்பல் அடித்து கொலை செய்து உடலை ஆற்றில் புதைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்து வெள்ளம் ஓடியதால் மண் அரிப்பில் உடலின் கால்கள் வெளியே தெரிந்தது. அவரை கொலை செய்தவர் யார்? இறந்த கிடந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்