என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணாமலையார்"
- அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
- அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.
திருவண்ணாமலையை முக்தி நகரம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் போற்றுகிறார்கள்.
அது விஷ்ணுவும், பிரம்மனும் பூஜித்த தலமாகும்.
அருணாசலம், இன்று, நேற்று தோன்றியதல்ல.
ஏழுலகமும், ஆகாயமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டானது.
அசுர லிங்கம், தைவ லிங்கம், மானிட லிங்கம், சுயம்பு லிங்கம் என்று தலங்கள் தோறும் எத்தனையோ லிங்கங்கள் இருக்கும்.
ஆனால், அருணாசலத்தில் மலையே லிங்கமாக உள்ளது.
முன்னொரு காலத்தில் சிவனே கிரியானான்.
அருணாசலத்தின் கீழ்ப்புறம் ஒரு மலையில் தேவர் கோனாகிய இந்திரன் இருந்து இறைவனைத் துதிக்கிறான்.
தென்புறக் குன்றில் இமயன் இருந்து வணங்குவான்.
மேற்புறத்தில் வருணன் கைகூப்பிப் பணிகிறான்.
வடதிசைக் குன்றில் குபேரன் இருந்து தோத்திரம் செய்கிறான்.
மற்ற நான்கு திக்குகளில் இருக்கின்ற மலைகளில் தங்கி வாயு, அக்கினி, ஈசான்ய, நிருதிகள் வணங்குவர்.
இவற்றைச் சுற்றி உள்ள மற்ற மலைகளில் தேவர்களும், சித்தர்களும், அஷ்ட வசுக்களும் இருந்து இறைவனைப் போற்றுகின்றனர்.
வேள்வி, தியானம், யோகம் என்று எத்தனை புரிந்தாலும் அண்ணாமலையானை எண்ணாவிடில் முக்தி என்பது சாத்தியம் இல்லை.
இத்தகைய பெரும் சிறப்புகளை கொண்ட இதனை, "எத்தலத்துக்கும் மூலம் அருணாசலம்" என்று உரைத்தார் நந்தி தேவர்.
- அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை.
- இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை விசேஷ வழிபாடு நடக்கும்.
மலைவலம் வர சிறந்த நாள் பவுர்ணமி, சிவராத்திரி கிரிவலம் மிகச்சிறப்பு என்று முன்பே பார்த்தோம்.
இதைவிட அதி சூட்சுமமான "வியா தீபாத யோக நாள்" அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கூறுகின்றனர்.
இந்த நாளை பாம்பு பஞ்சாங்கம் மற்றும் அர்ச்சகர் பஞ்சாங்கங்களில் மட்டுமே மதிப்பிடுவதாகவும் கூறுகின்றனர்.
அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்
சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும்.
ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு.
அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில்.
அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய காரகன் அங்காரகன்.
ஆகவே இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.
அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.
- தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
- நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.
தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெதுவாக நடக்க வேண்டும்.
இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது.
கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள்.
எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும்.
நீரை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.
மலையை ஒட்டி ஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.
தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.
இது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.
ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து கீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும்.
லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள்.
பவுர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும்.
முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.
அதனால் காட்டுப்பாதையாக இருந்தால் பவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.
தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.
- புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
- ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.
புனித தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.
பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.
கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.
அவ்வாறு கிரிவலத்தின் மேன்மையை உணர வேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.
அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு.
ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார்.
அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது.
ஒரு காட்டுப் பூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார்.
பூனையும் தன்னைக் காத்துக் கொள்ள ஓடத்துவங்கியது.
துரத்திய ராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர்.
ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார்.
காரணம் மலையை சுற்றி வந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேலோகம் சென்றதாம்.
ஆனால் ராஜா செல்லவில்லை. காரணம், ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம்.,
பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை பூனையை வேட்டையாட மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.
- வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள்.
- கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம், முதலியவை இவள் வாகனங்கள்.
ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை மாய்த்து தந்தத்தால் ஆன மாலை சூடிய பூவராக மூர்த்தியின் ஸ்த்ரீ அம்சமான
வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள்.
இவளே வாக்தேவி என்று ரிக் வேதம் சொல்லும்.
பெண்மையின் மஹா சக்தியான இவள் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரம்.
வெவ்வேறு வகையான கோலங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, சுதை பத்மம், மீன், குழந்தை
முதலியவற்றைக் கையில் ஏந்தி காட்சி தருபவள்.
கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம், முதலியவை இவள் வாகனங்கள்.
ஸ்ரீவித்யா உபாசனையில் பரவித்யாவாக போற்றப்படுபவள்.
விஷ்ணுவின் யோகமாயையான இவளே ஸ்ரீலலிதையின் தண்ட நாயகியாகவும், தண்டினி என்றும் வழங்கப்படுகிறாள்.
பூமி தானேஸ்வரியான இவள் நமக்கு பூமி சம்மந்தமான சொத்துக்கள் பெறவும், வழக்குகள் வியாஜ்யங்கள் இவற்றில் வெற்றி பெறவும் உதவுவாள்.
இவளை வழிபட வாஸ்து தோஷம் நீங்கும்.
தானிய வளம் பெருக இவள் கருணை வேண்டும்.
இவளை உபாசிப்பவர்களை எதிரிகள் எதிர்க்கமாட்டார்கள்.
வணங்குபவர்களின் குலத்திற்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து சகல சங்கடங்களிலிருந்து
நிவாரணம் தரும் இந்த மஹா சக்தியான கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான ஸ்ரீவராஹி,
அஸ்வாரூடா, கஜாரூடா, வியாக்ராரூடா, மந்திர வாராஹி சொப்ன வாராஹி என்று பல ரூபங்களில் தரிசனம் தருகிறாள்.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த ஜகன்மாதா இத்திருத்தலத்தில் அணி அண்ணாமலையர் சன்னதியின் மேற்கு புறத்தில் வீற்றிருந்து அருள்பாளித்து வருகிறாள்.
- பெரும்பாலும் வடமாநில பெண்களே பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
- மண்டபம் கட்டும்போது இவ்வில்வேஸ்வர் சுயம்புலிங்கமாக கிடைக்கப் பெற்றது.
இச்சன்னதி திருக்கோவிலின் பிரதான வாயிற்புறத்தின் நேர் எதிரே அமைந்துள்ளது.
வெளியிலிருந்தபடடியே தரிசிக்கும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது.
அருள்திகு பார்வதிதேவி சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்வதுபோல அமைந்துள்ள இச்சன்னதியில்,
பெரும்பாலும் வடமாநில பெண்களே பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணமும், திருமணமான பெண்களுக்கு மகப்பேறும், தான் நினைத்தபடியான வாழ்வினையும் பெற்று,
அவரவர்களுக்கு ஏற்றார்போல் வாழ்வு அமைவதாகவும் இத்திருக்கோவிலின் சேவார்த்திகளின் நம்பிக்கையாக உள்ளது.
அருள்மிகு வில்வேஸ்வரர் சன்னதி
இத்திருக்கோவிலின் மண்டபம் கட்டும்போது இவ்வில்வேஸ்வர் சுயம்புலிங்கமாக கிடைக்கப் பெற்றது.
சுமார் நான்கடி உயரத்தில் அமைந்துள்ள வில்வேசுவரர் சன்னதி இத்திருக்கோவிலின் ஸ்தலவிருட்சமான வில்வமரத்தின் பக்கத்தில் உள்ளது.
பொதுவாக வடமாநிலத்தவர்கள் இச்சன்னதியை அர்ச்சித்தும் இவ்வில்வேஸ்வரரை வணங்கியும் செல்கின்றனர்.
- நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு வரப்படுகிறது.
- மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக, பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.
அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதியில் இடது புறம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகா காளி,
இத்திருத்தலத்தில் சாந்தஸ்வருபியாக தெற்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சியளித்து,
தன்னை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து அருள்பாளித்து வருகிறார்.
பொதுவாக உக்கிரமான கோர ஸ்வருபத்தில் இருக்கும் மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக,
மகிஷாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.
சென்னையில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அளவிற்கு நம் அம்பாள் வீற்றிருந்து, அருளை அளித்து, சங்கடங்களை தீர்த்துவருகிறார்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அம்பாளுக்கு வெண்ணெய் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால்,
தீராத வியாதியும் நீங்கி, மனநிறைவும் காரியத்தில் வெற்றியும், சுபச்செய்தியும் கிடைக்கும் என்பது
பக்தர்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் பக்தர்களால் செய்யப்பட்டு வரப்படுகிறது.
வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் பெருவாரியான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.
- செவ்வாய் மற்றம் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை பழ விளக்கேற்றினால் விவாகம் கைகூடும்.
- சனிக்கிழமைகளில் தொடர்ந்து சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சகலவிதமான தொல்லைகளும் நீங்கும்.
பிரதான திருக்கோவிலின் உள்பிரகாரத்தில் வடக்குப் பக்கத்தில் எழுந்தருளியருக்கும் இந்த அம்பாளை,
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினத்தில், ராகு காலத்தில், எலுமிச்சை மற்றும் நெய்யினால் விளக்கும்
எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட, மன நிம்மதியும் இல்லத்தில் அமைதியும், வசீகரத்தன்மையும்
கைகூடி வருவதாக பக்தர்கள் வாயிலாக கண்ட உண்மையாகும்.
துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் செவ்வாய் மற்றம் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை பழம் விளக்கேற்றினால்
விவாகம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும்.
நவக்கிரகம்
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிரகத்தில் சனிக்கிழமைகளில் தொடர்ந்து சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி
வழிபட்டு வந்தால், சகலவிதமான தொல்லைகளும் நீங்கி வாழ்வில் அனைத்து விதமான பலன்களையும் பெறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- மகேசுவர வடிவங்களுள் ஒன்று தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் வடிவம்.
- இவர் கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்தில் தெற்கு முகமாக வீற்றிருக்கிறார்.
மகேசுவர வடிவங்களுள் ஒன்று தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் வடிவம்.
இவர் இத்திருத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்தில் தெற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
கல்லால மரத்தின் கீழ் யோகாசனத்தில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் நிலையிலும்,
முயலகன் என்ற அரக்கனை மிதித்த நிலையில் ஒரு திருவடியும், வீராசனமாக மற்றொரு திருவடியும் திகழ,
நான்கு திருக்கரங்களில் வலப்பகமுள்ள இரண்டில் சின் முத்திரையும், ருத்ராதட்ச மணிவடமும் கொண்டு,
இடப்பக்க திருக்கரங்களில் ஒன்றில் அமுத கும்பமும், மற்றொன்றில் வேதமும் கொண்டு காட்சி தருகிறார்.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு ஒவ்வொரு வியாழனன்றும், முழு கடலையினாலான
மாலையினை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு மாணவர்கள் தங்களது வாழ்வில் கல்வி வளம் பெற்று வருகின்றனர்.
மேன்மைமிக்க இந்த ஞானக்கடவுளை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட
ஞானமும், செல்வமும் பெருகும் சிவஞானமுக்தி கிடைக்கும்.
- ஆறுமுகங்களையும் ஆறு திருக்கரங்களையும் உடையவர்.
- இவரை திருக்கோவிலின் பிரதான வாயிலில் இருந்தே தரிசித்து அருளை பெறலாம்.
இந்த சன்னதி ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் எழுந்தருளி, தம்பதி சமேதராய் அருள்பாளிக்கிறார்.
ஆறுமுகங்களையும் ஆறு திருக்கரங்களையும் உடையவர்.
வலக்கரங்களில் ஒன்று அபய முத்திரையை காட்ட மற்றவற்றில் வேலும், கத்தியும் அமைந்துள்ளது.
இடக்கையில் கலிசதையும் கேடயத்தையும் கொண்டு மயில் மேல் அமர்ந்த நிலையில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
இவரை திருக்கோவிலின் பிரதான வாயிலில் இருந்தே தரிசித்து அருளை பெறலாம்.
ஒவ்வொரு மாதமும், கிருத்திகை, விசாகம் மற்றம் சஷ்டி பவருங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும், ஆராதனையும்,மூலவருக்கு நடைபெற்று அதனை தொடர்ந்து
ஆறுமுகர், சமேத வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகள் வாத்யங்களுடன், திருக்கோவிலின் உள் பிரகாரத்தை வலம் வருவர்.
வழிக்கு துணை ஸ்ரீ ஆறுமுகர்
"வழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு எசய்த பழிக்கு துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"
(இப்பாடலை வெளியே செல்லும்போது கூறினால் வழித்துணையாக ஸ்ரீஆறுமுகர் வருவார்).
- இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
- நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.
ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம்,
சந்தன காப்பு மாலை, ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும், நடைபெற்று வருகிறது.
பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும்,
தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.
இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாச்சலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும்,
விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.
அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும்.
இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில்,
குடை மற்றும் வெண்சாமரங்களுடன், தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ, பவனி வருவர்.
பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர்,
இந்த அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.
இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இரவு நான்கு கால பூஜைகளும் வில்வ தளத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று
ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.
- கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
- இங்கு வரதராஜ பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோவிலில் கருவரையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
மூலவரின் முன்பாக அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள் பாளிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.
பொதுவாக இறைவன் கிழக்கு முகமாகவே அருள்பாளிப்பார்.
ஆனால், இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வரதராசப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் சுவாமிக்கு வழிபாடும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது.
திருமணத்தடை புத்திர தோஷம் உள்ளவர்கள் இவ்வரதராச பெருமாள் இறைவனை உள்ளன்போடு
சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர,
விரைவில் திருமணமும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபட்டு வர, மகப்பேறும் பெறுவதாக ஐதீகம்.
திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் பூஜா முறையான வைகானச ஆகமப்படி,
இவ்வரதராச பெருமாளுக்கு பூஜை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் சென்று வரதராசரை தரிசிக்க இயலாதவர்கள் இத்திருத்திலத்தில் தரிசித்து அருளைப் பெறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்